ஓடும் காரில் பெண் அதிகாரி திடீர் சாவு


ஓடும் காரில் பெண் அதிகாரி திடீர் சாவு
x
தினத்தந்தி 27 Aug 2021 6:48 PM GMT (Updated: 27 Aug 2021 6:48 PM GMT)

ஓடும் காரில் பெண் அதிகாரி திடீர் சாவு

திருச்சி, ஆக.28-
தஞ்சை மாவட்டம் மாதாக்கோட்டைரோடு ராஜாலியார் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி உமா (வயது 52). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சொந்த ஊரான தஞ்சைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டு இருந்தார். காரை டிரைவர் துளசிதாஸ் ஓட்டி சென்றார். உமாவுக்கு உதவியாக பிச்சையம்மாள் என்ற பெண்ணும் உடன் சென்றார். அவர்களுடைய கார் திருச்சி-சென்னை பைபாஸ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே சென்றபோது, உமா திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்று, அங்கு உமாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த பெண் அதிகாரி உமாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story