விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு


விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 27 Aug 2021 7:40 PM GMT (Updated: 27 Aug 2021 7:40 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள செவிலியர் காலனியில் குடியிருந்து வந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இந்தநிைலயில் சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருத்தங்கல் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதி படுகாயம் அடைந்தார். உடனே அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் டிராக்டர் டிரைவர் சந்திரசேகர் மீது வழக்குபதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story