கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் குமாரபாளையத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கைது


கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் குமாரபாளையத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 8:44 AM GMT (Updated: 28 Aug 2021 8:44 AM GMT)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் குமாரபாளையத்தில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கைது

குமாரபாளையம், ஆக.28-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு சுருக்குபை கோபால் என்பவர் கொலை செய்யபட்டார். இந்த வழக்கில் ரவி என்ற காஞ்சலிங்கத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் பின்னர் தலைமறைவானார். 
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த காஞ்சலிங்கத்தை குமாரபாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவரை நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story