குண்டர் சட்டத்தில் ரவுடி கைது


குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 5:09 PM GMT (Updated: 28 Aug 2021 5:09 PM GMT)

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டாா்.

கடலூர், 

நெய்வேலி வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 28). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப, நெய்வேலியில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு சென்றார். 

அப்போது பெட்ரோல் பங்க் எதிரே சென்ற போது, அங்கு வந்த 2 பேர், அறிவழகனை வழிமறித்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு சென்றனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அறிவழகனிடம், நெய்வேலி மேல்வடக்குத்தை சேர்ந்த நடேசன் மகன் வீரமணி (23), இந்திராநகரை சேர்ந்த பழனிவேல் மகன் மணிமாறன் (23) ஆகியோர் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான வீரமணி மீது நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெய்வேலி நகர போலீசில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகளும், தெர்மல் போலீசில் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது. 

அதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம், ரவுடி வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.


 அதன் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணியிடம், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story