மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி


மாவட்டத்தில்  கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Aug 2021 6:36 PM GMT (Updated: 28 Aug 2021 6:36 PM GMT)

கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்தவர்களில் 2 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 386 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Next Story