நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா 2 பேர் பலி


நாமக்கல் மாவட்டத்தில்  மேலும் 45 பேருக்கு கொரோனா 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 9:09 AM GMT (Updated: 29 Aug 2021 9:09 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா 2 பேர் பலி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் 2 பேர் பலியாகினர்.
45 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 48,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 6 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,632 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் 45 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,677 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 53 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
2 பேர் பலி
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 467 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்த 70 வயது மூதாட்டியும், புதுச்சத்திரம் அருகே உள்ள தொட்டிப்பட்டியை சேர்ந்த 90 வயதுடைய முதியவரும் என இருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்தது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 47,654 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 554 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story