பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி


பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 5:29 PM GMT (Updated: 29 Aug 2021 5:29 PM GMT)

திருவாடானையில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.

தொண்டி, ஆக.30-
திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தை சேர்ந்த சேவியர் மனைவி அன்னபாக்கியம் (வயது 65). இவர் தொண்டியில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அரசு டவுன் பஸ்சில் காரங்காடு கிராமத்திற்கு சென்றவர் அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இறங்கும்போது தவறி கீழே விழுந்துள்ளார்.அப்போது பஸ் சக்கரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த தொண்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் தொண்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story