மணல் கடத்திய 2 பேர் கைது
தினத்தந்தி 30 Aug 2021 7:20 PM GMT (Updated: 30 Aug 2021 7:20 PM GMT)
Text Sizeமணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
கீரனூர்
கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் ஏற்றி வந்த தெற்கு துவரவயலை சேர்ந்த சிவசங்கர் (வயது 30), மகாலிங்கம் (31) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருமயம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire