ஜி.கே.மூப்பனார் உருவப்படத்துக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மாலை அணிவிப்பு


ஜி.கே.மூப்பனார் உருவப்படத்துக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 7:24 PM GMT (Updated: 30 Aug 2021 7:24 PM GMT)

நெல்லையில் ஜி.கே.மூப்பனார் உருவப்படத்துக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை:
நெல்லையில் ஜி.கே.மூப்பனார் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ்-த.மா.கா.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நினைவு நாள்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனாரின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி நெல்லையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜி.கே.மூப்பனார் உருவப்படத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா.

நெல்லை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜி.கே.மூப்பனார் உருவப்படத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ஜெகநாத ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அம்பை காங்கிரஸ் பொன் விழா மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வின்சென்ட், முத்துராமன், அந்தோணிசாமி, சண்முக குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை நகர தலைவர் முருகேசன் வரவேற்றார். 
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ரமணா, மேலிட பார்வையாளர் ஜார்ஜ் ராபின்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக அளவில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story