கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி


கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 Aug 2021 7:27 PM GMT (Updated: 30 Aug 2021 7:27 PM GMT)

மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 86 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 30 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.
 கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 288 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story