சாலையோர அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்


சாலையோர அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்
x
தினத்தந்தி 31 Aug 2021 5:05 PM GMT (Updated: 31 Aug 2021 5:05 PM GMT)

சாலையோர அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றம்

பந்தலூர்

பந்தலூர் தாலுகா பிதிர்காடு அருகே தஞ்சோரா பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான அபாயகரமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் அடிக்கடி முறிந்து சாலையில் விழுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

 இதனால் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று வருவாய்ததுறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன், பந்தலூர் தாசில்தார் குப்புராஜ் ஆகியோர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிட்டனர்.

 அதன்படி, பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார், கர்ணன் ஆகியோர் மேற்பார்வையில் அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதன் காரணமாக பிதிர்காட்டில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story