விபத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பலி


விபத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பலி
x
தினத்தந்தி 31 Aug 2021 8:54 PM GMT (Updated: 31 Aug 2021 8:54 PM GMT)

விபத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பரிதாபமாக இறந்தார்.

கீழப்பழுவூர்:

மருத்துவ உதவியாளர்
அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் இவர் விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் இருந்து பணிக்காக விளாங்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். பொய்யூர் கிராமத்திற்கு அருகே சென்றபோது அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
சாவு
இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story