இண்டூர் அருகே விஷம் குடித்த பெண் சாவு


இண்டூர் அருகே விஷம் குடித்த பெண் சாவு
x
தினத்தந்தி 1 Sep 2021 4:48 PM GMT (Updated: 1 Sep 2021 4:49 PM GMT)

இண்டூர் அருகே விஷம் குடித்த பெண் இறந்தார்.

பாப்பாரப்பட்டி,

இண்டூர் அருகே உள்ள சேவான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மாது. இவருடைய மகன் மணி. இவருக்கும் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த பொன்னியம்மாள் (வயது26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பொன்னியம்மாள் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் பெண் இறந்ததால் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story