பர்கூர் அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி


பர்கூர் அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 2 Sep 2021 1:00 AM GMT (Updated: 2 Sep 2021 1:00 AM GMT)

பர்கூர் அருகே நிலத்தகராறில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

பர்கூர்:
பர்கூர் அருகே நிலத்தகராறில்  ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
நிலத்தகராறு
பர்கூர் அருகே உள்ள புதுரோடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 68) ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவருக்கும், அவரது சகோதரர்களுக்கும் நிலத் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் துரைசாமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் 150 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏரி தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பர்கூர் தீயணைப்பு துறைக்கும்,  போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தொிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்தனர்.  மேலும் தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தாசில்தார் குருநாதன் ஆகியோர் விரைந்து வந்தனர்.
பரபரப்பு
அவர்கள் தற்கொலைக்கு முயன்ற துரைசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி துரைசாமியை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story