திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
x
தினத்தந்தி 2 Sep 2021 3:51 PM GMT (Updated: 2 Sep 2021 3:51 PM GMT)

திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
90 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று 100-க்கும் குறைவாக உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பாதிப்பு சற்று உயர்ந்திருந்தது. மேலும், 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
பலி இல்லை 
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 470-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 95 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 794-ஆக உள்ளது. 
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு மாவட்டத்தில் பலர் பலியாகி வந்தனர். ஆனால் நேற்று பலி இல்லை. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 932-ஆக உள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 744 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story