இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Sep 2021 7:35 PM GMT (Updated: 2 Sep 2021 7:35 PM GMT)

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை கண்டித்தும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரியும் இந்து முன்னணி சார்பில் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைெபற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கற்பக வடிவேல் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட சிலர் விநாயகர் பொம்மையை முகத்தில் அணிந்து கோஷமிட்டனர்.
 கறம்பக்குடி நகர இந்து முன்னணி சார்பில் முருகன் கோவில் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் இறைவனிடம் முறையிடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன், இந்து முன்னணி நகர செயலாளர் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
அறந்தாங்கி வடகரை முருகன் கோவில் எதிரே இந்து முன்னணி நகர தலைவர் ராஜரெத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 23 பேர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்தனா். பொன்னமராவதியில் உள்ள சிவன் கோவில் மற்றும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் இறைவனிடம் முறையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மீமிசலில் இந்து முன்னணி ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மீமிசல் நகரச் செயலாளர் பிரபாகரன், நகர தலைவர் நிதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story