கொரோனாவுக்கு புதிதாக 59 பேர் பாதிப்பு


கொரோனாவுக்கு புதிதாக 59 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 2 Sep 2021 8:12 PM GMT (Updated: 2 Sep 2021 8:12 PM GMT)

கொரோனாவுக்கு புதிதாக 59 பேர் பாதிப்பு

திருச்சி, செப்.3-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் பலியாகி உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 59 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 66 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு  வீடு திரும்பினர். திருச்சியில் கொரோனா தொற்றுக்கு யாரும் பலி இல்லை. தற்போது வரை 545 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story