கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு


கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Sep 2021 8:21 PM GMT (Updated: 2 Sep 2021 8:21 PM GMT)

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

சேலம், செப்.3-
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 55 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து புதிதாக 61 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 பேர், சேலம் ஒன்றியத்தில் 18 பேர், ஆத்தூர் பகுதிகளில் 11 பேர், நகராட்சி பகுதிகளில் 8 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 96 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதியவர் பலி
ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 96 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 751 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார். இவர் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,633 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story