மங்கலம் அருகே 4 ஆண் மயில்கள் செத்துக்கிடந்தன


மங்கலம் அருகே  4 ஆண் மயில்கள் செத்துக்கிடந்தன
x
தினத்தந்தி 3 Sep 2021 4:18 PM GMT (Updated: 3 Sep 2021 4:18 PM GMT)

மங்கலம் அருகே 4 ஆண் மயில்கள் செத்துக்கிடந்தன

மங்கலம், 
மங்கலம் அருகே  4 ஆண் மயில்கள் செத்துக்கிடந்தன. அந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
செத்துக்கிடந்த மயில்கள்
மங்கலத்தை அடுத்த பூமலூர்  விஜிபி மங்களாபுரி டவுன் பகுதியில் நேற்று மதியம் 4 ஆண் மயில்கள் அடுத்தடுத்து செத்துக்கிடந்தன. மேலும் 4  பெண் மயில்கள்  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. இதைப்   குடியிருப்போர் நலசங்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கும், பூமலூர் கிராம நிர்வாக அதிகாரிக்கும், மங்கலம் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு  திருப்பூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் திருநாவுக்கரசு மற்றும் திருமூர்த்தி,  கிராம நிர்வாக அதிகாரி கோபி, மங்கலம் கால்நடை மருத்துவர் செந்தில் ஆகியோர்  விரைந்து வந்தனர்.
 வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 4 பெண் மயில்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த பெண் மயில்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
மருத்துவ பரிசோதனை
அதனைத்தொடர்ந்து செத்துக் கிடந்த 4 ஆண் மயில்களின் உடல் உறுப்புகள் மற்றும் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே 4ஆண் மயில்களும்  விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story