அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு


அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு
x
தினத்தந்தி 3 Sep 2021 5:33 PM GMT (Updated: 3 Sep 2021 5:33 PM GMT)

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமுதி,
கமுதி கோட்டைமேட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே சென்று அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் அதனைச் சார்ந்த பொருள்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 12 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துமாரி கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து கம்ப்யூட்டரை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story