அரியலூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி


அரியலூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
x
தினத்தந்தி 3 Sep 2021 8:39 PM GMT (Updated: 3 Sep 2021 8:39 PM GMT)

அரியலூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 75 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 154 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 995 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 933 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 4,043 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 5,060 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story