நாமக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Sep 2021 6:24 PM GMT (Updated: 4 Sep 2021 6:24 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்:
65 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 49 ஆயிரத்து 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 85 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் நேற்று 58 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 72 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 473 பேர் பலியான நிலையில், 540 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முககவசம் அணிய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம்  அதிகரித்து வருகிறது. 
இதனால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story