கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு


கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 9:27 PM GMT (Updated: 4 Sep 2021 9:27 PM GMT)

கொரோனாவால் முதியவர் உயிரிழந்தார்.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 14 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேரும்  புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2-வது நாளாக நேற்றும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 68 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 75 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 154 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,017 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 930 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3,178 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 8,231 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story