தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழப்பு


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 Sep 2021 6:24 PM GMT (Updated: 5 Sep 2021 6:24 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.
20 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகயில் கண்டறியப்பட்டது. 
இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 234 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 21 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
2 பேர் உயிரிழப்பு
இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 248 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 231 ஆகும்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 26 ஆயிரத்து 964 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story