வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 5 Sep 2021 8:04 PM GMT (Updated: 5 Sep 2021 8:04 PM GMT)

நெல்லை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

நெல்லை:
நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 25). இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் வீரபுத்திரனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வீரபுத்திரனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story