பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி
பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு டி.ஜி.பி. அஞ்சலி.
திரு.வி.க. நகர்,
சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபிநாத் (வயது 56). சப்-இன்ஸ்பெக்டரான இவர், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று அவரது உடலுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கூடுதல் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட போலீசாரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் சப்-இன்ஸ்பெக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கோபிநாத்துக்கு காந்திமதி என்ற மனைவியும், கல்லூரியில் படிக்கும் லதா என்ற மகளும் உள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபிநாத் (வயது 56). சப்-இன்ஸ்பெக்டரான இவர், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று அவரது உடலுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கூடுதல் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட போலீசாரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் சப்-இன்ஸ்பெக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கோபிநாத்துக்கு காந்திமதி என்ற மனைவியும், கல்லூரியில் படிக்கும் லதா என்ற மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story