கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி


கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 6 Sep 2021 10:15 PM GMT (Updated: 6 Sep 2021 10:15 PM GMT)

வத்திராயிருப்பு அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியானன்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் பிரதாப் (வயது 15). இவன் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் பிரதாப், தனது நண்பர்களுடன் அமைச்சியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றான். அப்போது கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அவன் நீரில் மூழ்கினான். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 14 மணி நேரத்திற்கு பிறகு  சிறுவனின் உடலை மீட்டனர். இதையடுத்து சிறுவனின் உடலை கூமாப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story