ஓசூரில் நடந்த வாகன சோதனையில் காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது


ஓசூரில் நடந்த வாகன சோதனையில் காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Sep 2021 9:34 PM GMT (Updated: 7 Sep 2021 9:34 PM GMT)

கர்நாடகாவில் இருந்து வேலூருக்கு காரில் கடத்திய புகையிலை பொருட்களை ஓசூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஓசூர்:
கர்நாடகாவில் இருந்து வேலூருக்கு காரில் கடத்திய புகையிலை பொருட்களை ஓசூரில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
ஓசூர் அருகே ஜுஜுவாடி சோதனைச்சாவடி பகுதியில், ஓசூர் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும், இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து வேலூருக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. 
டிரைவர் கைது
இதையடுத்து போலீசார் கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் கார் மற்றும் 206 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை பொருட்கள் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story