கள்ளக்குறிச்சி அருகே விவசாயி, விஷம் குடித்து தற்கொலை


கள்ளக்குறிச்சி அருகே  விவசாயி, விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Sep 2021 5:35 PM GMT (Updated: 9 Sep 2021 5:35 PM GMT)

போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.முகையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெரியசாமி (வயது 30), விவசாயி. இவருக்கு செல்வராணி (26) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று பெரியசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதையறிந்த செல்வராணி ஏன் தினந்தோறும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறீர்கள்? என கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெரியசாமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story