உரக்கடைகளில் வேளாண் அதிகாரி ஆய்வு
கம்பம் பகுதியில் உரக்கடைகளில் வேளாண் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
கம்பம்:
கம்பம் பகுதியில் உரம் விற்பனை குறித்து உரக்கடைகளில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அழகுநாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அனுமதி பெறாத உரங்கள் விற்பனை செய்யபடுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உர மூட்டைகளை விற்பனை செய்வது, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு உரமூட்டைகளை விற்பனை செய்வது தெரியவந்தால் விற்பனையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்த ஆய்வின்போது உரம் தர கட்டுப்பாடு அலுவலர்கள், கம்பம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story