பள்ளி மாணவி தற்கொலை


பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 10 Sep 2021 4:49 PM GMT (Updated: 10 Sep 2021 4:49 PM GMT)

தேவாரத்தில் பள்ளி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி : 

தேவாரம் மல்லிங்கர் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சவுந்தர்யா (வயது 16). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது சவுந்தர்யா தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 


பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story