நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Sep 2021 6:38 PM GMT (Updated: 10 Sep 2021 6:38 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

நாமக்கல்:
53 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 49,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 3 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,414 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 53 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,467 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
611 பேருக்கு சிகிச்சை
மாவட்டத்தில் இதுவரை 48,379 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 477 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். 611 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story