ஒரே நாளில் 15 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்


ஒரே நாளில் 15 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Sep 2021 6:55 PM GMT (Updated: 10 Sep 2021 6:55 PM GMT)

ஒரே நாளில் 15 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

வேலூர்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு நடைபெறும் திருமணத்தை தடுக்கும் பணியில் மாவட்ட சமூக நலத்துறை, சைல்டுலைன் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் 3 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன. 

அதன்பேரில் அலுவலர்கள் அங்கு சென்று 18 வயது நிரம்பாத சிறுமிகளின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் 3 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம், திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 சிறுமிகளின் திருமணம் என்று நேற்று ஒரே நாளில் 3 மாவட்டங்களில் 15 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Next Story