கொரோனா பாதிப்பு நேற்று 100 ஐ கடந்தது


கொரோனா பாதிப்பு நேற்று 100 ஐ கடந்தது
x
தினத்தந்தி 10 Sep 2021 9:45 PM GMT (Updated: 10 Sep 2021 9:45 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக 100-க்கும் கீழே இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 100 ஐ கடந்தது.

திருப்பூர்
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக 100-க்கும் கீழே இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 100-ஐ கடந்தது. அதன்படி மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 189-ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 56 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 337-ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 916 பேர் மாவட்டம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று பலியானார்.

Next Story