மது விற்ற பெண் கைது


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 11 Sep 2021 4:18 PM GMT (Updated: 11 Sep 2021 4:18 PM GMT)

மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி(வயது 43) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story