கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 11 Sep 2021 4:52 PM GMT (Updated: 11 Sep 2021 4:52 PM GMT)

மேலும் 30 பேருக்கு தொற்று உறுதி

கடலூர், 
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 62 ஆயிரத்து 701 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 61 ஆயிரத்து 435 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 846 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பண்ருட்டியை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதவிர நேற்று மட்டும் 19 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story