மனைவி இறந்த சோகத்தில் கணவரும் சாவு


மனைவி இறந்த சோகத்தில் கணவரும் சாவு
x

திருவாவடுதுறையில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

குத்தாலம்:
திருவாவடுதுறையில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார்.  சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஊராட்சி டி.மேலக்கடை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது88), இவருடைய மனைவி மாரியம்மாள் (82). இவர்களுக்கு திருமணாகி  60 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். 
இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக மூத்த மகன் செழியன் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர். 
மனைவி இறந்த சோகத்தில் கணவரும் சாவு
இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரியம்மாள் நேற்று முன்தினம் இரவு  11.30 மணியளவில் உயிரிழந்தார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது மனைவியை பிரிந்த துக்கம் தாங்காமல் கலியபெருமாள் அடுத்த சில மணி நேரங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனையடுத்து உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் சேர்ந்து இறந்த தம்பதியினருக்கு முறைப்படி இறுதிசடங்கு செய்து இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டது.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்து சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் திருவாவடுதுறை கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story