தஞ்சையில் 7 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை


தஞ்சையில் 7 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Sep 2021 7:42 PM GMT (Updated: 11 Sep 2021 7:42 PM GMT)

தஞ்சையில் வரதட்சணை கொடுமையால், 7 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக, கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் வரதட்சணை கொடுமையால், 7 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக, கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது35). இவருக்கும் உதயா (32) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் தரணிதரன் என்ற மகன் உள்ளார். திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று விட்டார்.இந்த நிலையில் உதயாவிடம் வரதட்சணையை கேட்டு முத்துக்குமார் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் உதயா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இதன் பின்னர் உதயாவின் தந்தை சந்திரசேகர், தனது மகளை மீண்டும் முத்துக்குமார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் உதயாவை முத்துக்குமார் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 
7 மாத கர்ப்பிணி
இதனால் உதயா தூக்கமாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த உதயாவின் தந்தை சந்திரசேகர் மகளை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால், மகளின் வாழ்க்கையை எண்ணி போலீசில் புகார் அளிக்காமல் இருந்தார்.
இந்தநிலையில், உதயாவின் கணவரான முத்துக்குமார் வெளிநாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் திரும்பிய நிலையில், மீண்டும் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்தார். இதில் 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த உதயாவை மீண்டும் கணவர் முத்துக்குமார், அவரது குடும்பத்தினர், சேர்ந்து அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 
கணவர்- மாமனார் கைது
இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி உதயா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, சந்திரசேகரின் உறவினர்கள் சிலர் அவருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சந்திரசேகர்,  முத்துக்குமார் வீ்ட்டுக்கு வந்து பார்த்த போது, மகளின் உடலில் தீக்காயங்கள் அதிகளவில் இருந்தன. இதனால் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, தஞ்சை தமிழ்பல்கலைக்கழக போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயாவின், கணவர் முத்துக்குமார், மாமனார் மனோகர் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story