சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 11 Sep 2021 9:07 PM GMT (Updated: 11 Sep 2021 9:07 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் குறைவாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் 15 பேர், சேலம் ஒன்றியத்தில் 24 பேர், ஆத்தூர் பகுதியில் 5 பேர், நகராட்சி பகுதியில் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுதவிர நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 3 பேர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 96 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 46 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 578 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவரும், 48 வயதுடைய பெண்ணும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியாகினர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story