விபத்தில் மூதாட்டி பலி


விபத்தில் மூதாட்டி பலி
x
தினத்தந்தி 12 Sep 2021 8:14 PM GMT (Updated: 12 Sep 2021 8:14 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் மூதாட்டி பரிதாபமாக பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகாசி பழனி ஆண்டவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). இவருடைய தாய் சரோஜா தேவி (82). சிவகுமாரின் மகன் ஹரிஷ் (30). ஹரிஷின் மனைவி ஆர்த்தி (28). இவர்கள் சேத்தூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலான அய்யனார் கோவிலுக்கு காரில் சென்றனர். காரை சிவகுமார் ஓட்டி வந்தார். சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாமி நத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் சரோஜாதேவி உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் சரோஜா தேவியை சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த மற்ற 3 பேரும் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story