நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கு; தயாரிப்பாளர், இயக்குனருக்கு போலீசார் நோட்டீசு


நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கு; தயாரிப்பாளர், இயக்குனருக்கு போலீசார் நோட்டீசு
x
தினத்தந்தி 12 Sep 2021 8:57 PM GMT (Updated: 12 Sep 2021 8:57 PM GMT)

நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.

பெங்களூரு:

அர்ஜூன் மீது பாலியல் புகார்

  தமிழ், கன்னடம் திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அர்ஜூன் சா்ஜா. இவர், கன்னடத்தில் நடித்திருந்த விஸ்மய என்ற படத்தில் (தமிழில் நிபுணன் என்ற பெயரில் ெவளியானது) அவருக்கு ஜோடியாக சுருதி ஹரிகரன் நடித்திருந்தார்.

  இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் நடிகை சுருதி ஹரிகரன் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவரிடமும், நடிகை சுருதி ஹரிகரனிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தனர்.

நோட்டீசு

  ஆனால் வழக்கு சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகும்படி பல முறை போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தும் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குனர் அருண், அரவிந்த் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி போலீசாா நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.

  இவர்களில் அருண் விசாரணைக்கு ஆஜராக போலீசாரிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. மற்றவர்கள் விரைவில் ஆஜராக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் அர்ஜூன் மீதான வழக்கை கப்பன் பார்க் போலீசார் மீண்டும் கையில் எடுத்து விசாரணையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story