வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு


வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Sep 2021 4:01 PM GMT (Updated: 13 Sep 2021 4:01 PM GMT)

வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு

வெள்ளகோவில், 
வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள தனியார் மருந்தகங்களில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமையில், டாக்டர். கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் வட்டார குடும்ப நல மேற்பார்வையாளர் பெரியசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக்கூடாது என்பதையும் தாய் சேய் நலத்தை பாதுகாக்கும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு மாத்திரைகள் வினியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டனர்.
 மேலும் அவ்வாறு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்து, மாத்திரைகளும் கொடுக்கக் கூடாது என்பதை அனைத்து மருந்து கடைகளுக்கும் எடுத்துக்கூறினர். இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி கூறினார்.

Next Story