விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு


விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 13 Sep 2021 7:11 PM GMT (Updated: 13 Sep 2021 7:11 PM GMT)

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:

பாளையங்கோட்டை தெற்கு பஜார் அகஸ்தியர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 44). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் வந்த மோட்டார் சைக்கிள், மாரியப்பன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நேற்று பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story