பஞ்சாயத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பஞ்சாயத்து ெதாழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம பஞ்சாயத்து மேல்நிலைக்குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திருமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா, சி.ஐ.டி.யு. மாவட்ட உதவித் தலைவர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலருக்கு ஊதிய உயர்வு வழங்கிடவும், மாதந்தோறும் பாக்கியில்லாமல் சம்பளத்தை வழங்கவும், பஞ்சாயத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் 7-வது ஊதியக்குழு ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story