விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி
விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி.
திருவொற்றியூர்,
சென்னை ஓட்டேரி பி.பி.சாலை போலீஸ் குடியிருப்பு பி பிளாக்கை சேர்ந்தவர் ரவி செல்வம் (வயது 58). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு விஷவண்டு கடித்தது. இதனால் அவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அப்போதில் இருந்தே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் 12-ந் தேதி அவருக்கு மீண்டும் காலில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சப்-இன்ஸ்பெக்டர் ரவி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
2 வருடங்களுக்கு முன்பு கடித்த வண்டின் விஷம், உடல் முழுவதும் பரவி அவரது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னை ஓட்டேரி பி.பி.சாலை போலீஸ் குடியிருப்பு பி பிளாக்கை சேர்ந்தவர் ரவி செல்வம் (வயது 58). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு விஷவண்டு கடித்தது. இதனால் அவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அப்போதில் இருந்தே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் 12-ந் தேதி அவருக்கு மீண்டும் காலில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சப்-இன்ஸ்பெக்டர் ரவி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
2 வருடங்களுக்கு முன்பு கடித்த வண்டின் விஷம், உடல் முழுவதும் பரவி அவரது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story