விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி


விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 14 Sep 2021 9:06 AM GMT (Updated: 14 Sep 2021 9:06 AM GMT)

விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி.

திருவொற்றியூர்,

சென்னை ஓட்டேரி பி.பி.சாலை போலீஸ் குடியிருப்பு பி பிளாக்கை சேர்ந்தவர் ரவி செல்வம் (வயது 58). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு விஷவண்டு கடித்தது. இதனால் அவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அப்போதில் இருந்தே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் 12-ந் தேதி அவருக்கு மீண்டும் காலில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சப்-இன்ஸ்பெக்டர் ரவி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

2 வருடங்களுக்கு முன்பு கடித்த வண்டின் விஷம், உடல் முழுவதும் பரவி அவரது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story