3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 14 Sep 2021 7:22 PM GMT (Updated: 14 Sep 2021 7:22 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

சேரன்மாதேவி அருகே உள்ள தெற்குசங்கன்திரடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது21), முனைசேகரன்குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன் (20). இவர்கள் மீது சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று செல்வம், சரவணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது. 

பாளையங்கோட்டை அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் வானமாமலை என்ற குரளி வானமாமலை (34). இவர் பல்வேறு வழக்குகளில் மூலைக்கரைப்பட்டி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று வானமாமலையை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து வானமாமலை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவு நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

Next Story