போடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தாய்-மகன் படுகாயம்


போடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தாய்-மகன் படுகாயம்
x
தினத்தந்தி 15 Sep 2021 4:22 PM GMT (Updated: 15 Sep 2021 4:22 PM GMT)

போடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயம் அடைந்தனர்.

போடி:
கம்பம் கே.ஜி.பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார் (வயது 22). இவர் நேற்று தனது தாய் அம்பிகாவை (45) அழைத்து மோட்டார் சைக்கிளில் போடி அருகே உள்ள சிலமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். 
அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் போடி நாகலாபுரம் ரேஷன் கடை தெருவை சேர்ந்த வெங்கடசாமி (66) என்பவர் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழேவிழுந்த ராஜ்குமாரும், அவரது தாய் அம்பிகாவும் படுகாயம் அடைந்தனர். வெங்கடசாமி காயமின்றி தப்பினார். 
இதையடுத்து காயமடைந்த தாய், மகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ராஜ்குமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வெங்கடசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story