கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி


கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Sep 2021 7:18 PM GMT (Updated: 15 Sep 2021 7:18 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானார்கள். புதிதாக 34 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 62 ஆயிரத்து 829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 34 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னை, பெங்களூருவில் இருந்து குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கடலூர் வந்த 5 பேருக்கும், நோய்த்தொற்று பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 24 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 61 ஆயிரத்து 548 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 54 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இது வரை 848 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

850-ஆக உயர்வு

கம்மாபுரத்தை சேர்ந்த 62 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், சிதம்பரத்தை சேர்ந்த 45 வயது ஆண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 850 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதித்த 363 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 48 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story