கொரோனாவுக்கு ஒருவர் பலி; 10 பேருக்கு தொற்று


கொரோனாவுக்கு ஒருவர் பலி; 10 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 Sep 2021 6:24 PM GMT (Updated: 16 Sep 2021 6:24 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். புதிதாக 10 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 257 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 4 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 868 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 53 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 361 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


Next Story