6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 16 Sep 2021 6:33 PM GMT (Updated: 16 Sep 2021 6:33 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்குகள்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி சுண்டாங்காடை சேர்ந்தவர் சந்த குரூஸ் மகன் சிலுவை அருள் சந்துரு (வயது 19), ஜெய ஆரோக்கிய செல்வன் மகன் பிரதீஷ் என்ற சஞ்சய் பிரதீஷ் (19), பாத்திமா நகரை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் டெனிஸ் என்ற சிலுவை மிக்கேல் டெனிஸ் (21), சூசை சந்தியாகு மகன் வினிஸ்டர் என்ற அன்றன் சேவியர் வினிஸ்டர் (30), சுனாமி காலனியை சேர்ந்த சிலுவை அலங்காரம் மகன் இருதய யோவான் (38). 

இவர்கள் 5 பேரும் கொலை வழக்குகளில் கூடங்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாரி ராஜ் என்ற ராசுக்குட்டி (22). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் சேரன்மாதேவி போலீசாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் இவர்கள் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி உத்தரவிட்டார். 

இதனையடுத்து போலீசார், 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை, சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story